பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் – கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண.

ஏற்றுமதியை மையமாகக் கொண்ட  பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின்போது பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் கைத்தொழில்துறையின் முன்னேற்றத்திற்கு தேவையான மூலோபாய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தயங்க மாட்டேன் என கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண அவர்கள் தெரிவித்தார். கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதி  சிறிமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில் கைத்தொழில் அமைச்சு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த “பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் கண்காட்சி 2024”  கண்காட்சியில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கண்காட்சிப் பூமி பூராவும் சென்று பார்வையிட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண அவர்கள், பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கைத்தொழிலதிபர்களுடன் கருத்துகளை பரிமாறிக்கொண்டதுடன் அப்போது கைத்தொழிலதிபர்கள் தற்போது மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதிலுள்ள பிரச்சினைகள், பயிற்சி பெற்ற பணியாளர்கள் பற்றாக்குறை, உற்பத்தி செலவு அதிகரிப்பு, அமுலிலுள்ள வரிக் கொள்கைகள் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரிடம் விடயங்களை முன்வைத்தனர்.   இங்கு, சர்வதேச சந்தையை வெற்றிகொள்ள முடியுமான மட்டத்திலான உயர் தரமான பாதணிகள் மற்றும் தோல் உற்பத்திக்காக கைத்தொழில்துறையினரை  தனிப்பட்ட வகையில் பாராட்டிய அமைச்சர், நாட்டிற்கு அன்னியச் செலாவணி வருமானத்தை சேமிக்கும் இந்தப் பாரிய கைத்தொழில் துறையை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மிக விரைவில் எடுப்பதாக தெரிவித்தார்.

பாடசாலை கைத்தொழில் முயற்சியாளர்கள் வட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்திய 10 ஆசிரியர்கள் இந்தியா பயணம்…..

பாடசாலை கைத்தொழில் முயற்சியாளர்கள் வட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்திய 10 ஆசிரியர்கள் இந்தியா பயணம்….. ஏற்றுமதியை மையமாகக் கொண்ட  பொருளாதாரமொன்றின் நிமித்தம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக தொழில்முயற்சிகள்  தலைமைத்துவத்தை பாடசாலையிலேயே இனங்கண்டு  அவர்களை ஊக்குவித்து எதிர்காலத்தில் திறமையான தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் நோக்கத்துடன், கைத்தொழில்  மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண எண்ணக்கருவின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை கைத்தொழில் முயற்சியாளர்கள் வட்டங்களிடையே அவற்றை சிறப்பான வகையில் நடைமுறைப்படுத்தும் பாடசாலைகளின்  கைத்தொழில் முயற்சியாளர்கள் வட்டங்களுக்குப் பொறுப்பான   பத்து ஆசிரியர்களுக்கு இந்தியாவில் கைத்தொழில் துறைகளை ஆராய்வதற்கான ஆய்வு சுற்றுலாவொன்றுக்கான வாய்ப்பை வழங்குவதற்கு கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் அண்மையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய  9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட பத்து ஆசிரியர்கள் அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டதுடன், இந்த விஜயத்தின்போது பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல கைத்தொழிற்சாலைகளை அவதானிப்பதற்கான வாய்ப்பு அந்த ஆசிரியர்களுக்குக் கிடைத்தது. விஜயத்தை முடித்துக் கொண்டதன் பின்னர் பெப்ரவரி 12 ஆம் திகதி  கைத்தொழில் அமைச்சில்  கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரண அவர்களைச் சந்தித்த அந்த ஆசிரியர்கள்  அந்த ஆய்வு  விஜயத்தின் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்ட அனுபவத்தை தமது பாடசாலைகளின் தொழில் முயற்சியாளர்கள் வட்டங்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் விதம் பற்றியும், அமைச்சரிடம் தெரிவித்தனர். ஆசிரியர்கள் மாத்திரமன்றி பாடசாலை தொழில் முயற்சியாளர்கள் வட்டங்களில் வெற்றிகரமாக முன்னறி வரும் பாடசாலை தொழில்முயற்சியாளர்களையும் தெரிவு செய்து எதிர்காலத்தில் அவர்களுக்கும்  தொழில் முயற்சிகள் தொடர்பான வெளிநாட்டு கல்விச் சுற்றுலாக்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளமாறு அமைச்சர் ரமேஷ் பத்திரண அவர்கள் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவருக்கு பணிப்புரை விடுத்தார். இந்த சந்திப்பின்போது இந்த ஆசிரியர்கள், ஏற்கனவே தமது பாடசாலைகளில் ​​தொழில்முயற்சியாளர்கள் வட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக செயற்படுவதாகவும், அந்த வட்டங்களில் உள்ள மாணவர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், சில பாடசாலை தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி சந்தையில் விற்பனைக்கு விடுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சரிடம் தெரிவித்தனர். இங்கு மாணவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட சில பொருட்களையும் அந்த ஆசிரியர்கள் அமைச்சரிடம் காண்பித்ததுடன், அந்தத் தயாரிப்புகளின் தரம் மற்றும் வடிவமைப்பை அமைச்சர் பாராட்டினார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை தொழில் முயற்சியாளர் வட்டங்கள், தற்போது நாடளாவிய ரீதியில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் சுமார் 10,000 பாடசாலை மாணவர்கள் இங்கு செயற்படுகின்றனர். தற்போது சில பாடசாலைகளில் பாடசாலை மட்டத்தில் உற்பத்திக் கைத்தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைவர் வைத்தியர் சாரங்க அழகப்பெரும, கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தொழில் முயற்சிகள் அபிவிருத்திப் பணிப்பாளர் ரேணுக்கா ஜயலத், உதவிப் பணிப்பாளர் கலாநிதி சமிந்த ரணதுங்ககே ஆகியோர் கலந்துகொண்டனர்.

மோட்டார் வாகன உற்பத்திக் கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்காக கைத்தொழில் அமைச்சினால் பல்வேறு திட்டங்கள்….

மோட்டார் வாகன உற்பத்திக் கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்காக கைத்தொழில் அமைச்சினால் பல்வேறு திட்டங்கள் இலங்கையின் மோட்டார் வாகன உற்பத்தித் துறையில் உற்பத்தி செயல்முறையை எளிதாக்குவதற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கும் செயலமர்வொன்று பெப்ரவரி 16 ஆம் திகதி கொழும்பு மரினோ பீச் ஹோட்டலில் நடைபெற்றது. இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள கைத்தொழிலாளர்களுக்கு இந்தத் துறை தொடர்பாக அரசாங்கம் பின்பற்றும் வழிமுறைகள் மற்றும் தமது உற்பத்திகளுக்கு அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியுமான உதவி பற்றிய தெளிவைப் பெற்றுக்கொடுப்பதே இந்த செயலமர்வின் முதன்மை நோக்கமாகும். கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திருமதி திலக்கா ஜயசுந்தர அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் 100 இற்கும் மேற்பட்ட மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள்,  மோட்டார் வாகன பாகங்களை ஒன்றிணைப்பவர்கள மற்றும் மோட்டார் வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர். கைத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வு இலங்கை சுங்கம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம், இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம், சுற்றாடல் அமைச்சு, மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடாத்தப்பட்டது. ஏற்றுமதியை மையமாகக் கொண்ட  பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக  இனங்கண்டு கொள்ளப்பட்டுள்ள 7 துறைகளிடையே மோட்டார் வாகன கைத்தொழில் துறை முக்கிய இடத்தை வகிக்கின்றது. அந்தக் கைத்தொழில் துறையை முன்னேற்றும் நோக்கத்துடன், 2021 ஆம் ஆண்டில், கைத்தொழில் அமைச்சானது  தனியார் துறையின் உதவியுடன்  மோட்டார் வாகன கைத்தொழிலுக்கான தர நிர்ணயத் தொழிற்பாட்டு நடைமுறையை (SOP) அறிமுகப்படுத்தியதன் பின்னர் அந்தக் கைத்தொழில் துறையில் துரித வளர்ச்சி ஏற்பட்டது. 2021 ஆம் ஆண்டாகும்போது  இலங்கையில் செயற்படுத்தப்பட்ட வாகன பாகங்களை ஒன்றிணைக்கும் கைத்தொழில்களின் எண்ணிக்கை 4 ஆக இருந்ததுடன், 2021 இல் தர நிர்ணயத் தொழிற்பாட்டு நடைமுறை (SOP) அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் 32 நிறுவனங்கள் வாகன பாகங்களை ஒன்றிணைப்பதற்காக கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்துகொண்டுள்ளன. அவற்றில 14 நிறுவனங்கள் தற்போது வர்த்தக ரீதியாக தங்களுடைய உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.   மேலும்  90 வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்திக்கான பதிவைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன்  அவற்றில் 58 பேர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்தத் துறையின் முன்னேற்றத்திற்காக பல வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கமைய,  அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தக் கைத்தொழில் துறை பெரும் முன்னேற்றம் அடையும் என கைத்தொழில் அமைச்சினால் எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் வருடாந்த வாகன இறக்குமதிச் செலவான 1850 பில்லியன் ரூபாவை 30% மீதப்படுத்துவதும் எதிர்காலத்தில்  இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தின் அதிகளவை இத்துறையினூடாக வழங்குவதும் கைத்தொழில் அமைச்சின் நோக்கங்களில் ஒன்றாகும். அத்துடன் அதிக எண்ணிக்கையிலான தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியுமான ஒரு கைத்தொழிலாகவும் இந்தத் துறை முக்கியமானதாக இருக்கின்றது.  மோட்டார் வாகன உற்பத்தியின்போது  இரு சக்கர வாகனப் பாகங்களை ஒன்றிணைக்கும்போது உள்நாட்டு பெறுமதி சேர்ப்பு 25%  இலும் அதிகளவிலும்,  நான்கு சக்கர வாகனப் பாகங்களை ஒன்றிணைக்கும்போது உள்நாட்டு பெறுமதி சேர்ப்பு 20% இலும் அதிகளவிலும், உதிரிப் பாகங்கள் உற்பத்தியின்போது உள்நாட்டு பெறுமதி சேர்ப்பு  50% இலும் அதிகளவிலும் இருத்தல் வேண்டுமென்பதோடு அதன்போது அந்த உற்பத்திகளுக்காக 70%  வரிச் சலுகையைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த செயலமர்வின்போது  உள்நாட்டுப் பெறுமதி சேர்ப்பை அதிகரித்துக்கொள்ளல்,  இறக்குமதி ஏற்றுமதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளல்,  பிணைக்கப்பட்ட பண்டசாலைகளை (கிடங்குகள்) பேணிவரல், சுற்றாடல் அனுமதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் அந்த துறையில் நிலவும் சிக்கல்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்த செயலமர்வில் கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், மோட்டார் வாகனத் துறை ஆலோசனைக் குழு உத்தியோகத்தர்கள்,  வாகன உற்பத்தியாளர்கள், வாகன பாகங்களை ஒன்றிணைப்போர்,  வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்கள், தொழில் முயற்சியளார்கள் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையானோர் கலந்துகொண்டனர்.

ඛනිජ හා ඛනිජ වැලි සම්පත්හි උපරිම ආර්ථික ප්‍රතිලාභය රටට අත්කර දීමට අවශ්‍ය කටයුතු සිදුකරනවා – කර්මාන්ත ඇමති

ඛනිජ හා ඛනිජ වැලි සම්පත්හි උපරිම ආර්ථික ප්‍රතිලාභය රටට අත්කර දීමට අවශ්‍ය කටයුතු සිදුකරනවා – කර්මාන්ත ඇමති ඛනිජ හා ඛනිජ වැලි සම්පත් වෙනුවෙන් කර්මාන්ත අමාත්‍යංශය යටතේ ස්ථාපිත කොට ඇති අමාත්‍යංශ උපදේශක කමිටුවේ විශේෂ සාකච්ඡාවක් අද උදෑසන වැවිලි කර්මාන්ත හා කර්මාන්ත අමාත්‍ය වෛද්‍ය රමේෂ් පතිරණ මහතාගේ ප්‍රධානත්වයෙන් අමාත්‍යංශ පරිශ්‍රයේදී පැවැත්විණි. මෙම සාකච්ඡාව තුළදී ඛනිජ හා ඛනිජ වැලි සම්පත් වෙනුවෙන් අගයදාම නිෂ්පාදන ව්‍යාපෘතීන් ක්‍රියාත්මක කිරීමේ අවශ්‍යතාව දීර්ඝව කතිකාවට ලක්වුණු අතර එහිදී මතුවන ගැටළු හා බාධාවන් පිළිබඳවද පුළුල් සාකච්ඡාවක් කෙරිණි. අමාත්‍යවරයා මෙහිදී අදහස් දක්වමින් කියා සිටියේ ශ්‍රී ලංකාව තුළ ඇති ඛනිජ හා ඛනිජ වැලි සම්පත් ස්ථානීයව මෙන්ම ගුණාත්මකව හා ප්‍රමාණාත්මකවද විධිමත් ගවේෂණයට ලක් කොට අගයදාම නිෂ්පාදන වැඩසටහන් කඩිනමින් ක්‍රියාත්මක කළ යුතු බවයි. එහිදී එම අගය එකතුකල නිෂ්පාදනයන් ක්‍රියාත්මක කිරීමට ලෝකයේ නව්‍ය තාක්ෂණය , අද්‍යතන ප්‍රවණතා මෙන්ම ගෝලීය වෙළෙඳපොළ තත්වයන් කෙරෙහිද විශේෂ අවධානය යොමුකල යුතු බවත් සදහන් කල අමාත්‍යවරයා ඒ හරහා වැඩි ආර්ථික ප්‍රතිලාභයක් රටට අත්කර දිය හැකි බවත් වැඩිදුරටත් සදහන් කලේය. එමෙන්ම මෙම සාකච්ඡාව තුළදී අගයදාම නිෂ්පාදන විධිමත් කිරීමට යම් නිෂ්චිත වැඩපිළිවෙළක් සැකසීමට මෙන්ම ඒ ආශ්‍රිත සමාගම්වලට , කර්මාන්ත කරුවන්ට හා ව්‍යවසායකයින්ට උපරිම පහසුකම් සැපයීමටත් අවශ්‍ය කටයුතු කතිකා කෙරිණි. මෙහිදී ගෝලීය තත්වයන් යටතේ තාක්ෂණය මත පදනම් වූ විධිමත් කතිකාවක් රට තුළ ඇති කිරීමටත් එකගතාවය පළ කෙරිණි. මෙම අවස්ථාවට මහාචාර්ය අජිත් ද අල්විස් , මහාචාර්ය අතුල සේනාරත්න , කර්මාන්ත අමාත්‍යංශයේ ලේකම් තිලකා ජයසුන්දර , අතිරේක ලේකම් වරුන් වන රංජිත් විමසූරිය , චමින්ද පතිරාජ , ලංකා ඛනිජ වැලි සමාගමේ , ලංකා කාර්මික සංවර්ධන මණ්ඩලයේ , කහටගහ ග්‍රැෆයිට් ලංකා සමාගමේ , භූ විද්‍යා සමීක්ෂණ හා පතල් කාර්‍යංශයේ සභාපතිවරුන් , නිළධාරින් සහ කර්මාන්තකරුවන් ඇතුළු සම්භාවනීයන් පිරිසක් එක්වූහ. එමෙන්ම මෙම අවස්ථාවට සූම් තාක්ෂණය ඔස්සේ මහාචාර්ය අමිල රත්නායක , මහාචාර්ය එච්.එම්.ටී.ජී.ඒ.පිටවල , මහාචාර්ය ගාමිණී රාජපක්ෂ , ආචාර්ය එල්.පී.එස්.රෝහිත යන මහත්වරුන්ද එක්වූහ.

දේශීය සම්පත් ආරක්ෂා කරගනිමින් අයෝජකයන්ට ඇති ඉඩ ප්‍රස්ථාවන් පුළුල් කරනවා ” – වැවිලි කර්මාන්ත හා කර්මාන්ත ඇමති

“දේශීය සම්පත් ආරක්ෂා කරගනිමින් අයෝජකයන්ට ඇති ඉඩ ප්‍රස්ථාවන් පුළුල් කරනවා “ – වැවිලි කර්මාන්ත හා කර්මාන්ත ඇමති ” උපරිම පහසුකම් සලසමින් ආයෝජකයන්ට මෙරට තුළ නිදහස් වටපිටාවක් නිර්මාණය කරනවා “ – ආයෝජන ප්‍රවර්ධන ඇමති දෙස් විදෙස් ආයෝජකයන් සදහා උපරිම පහසුකම් සහිත ඉඩ ප්‍රස්ථා සලසාදීමේ විධිමත් වැඩපිළිවෙළක් ක්‍රියාත්මක කිරීමේ අරමුණෙන් , වැවිලි කර්මාන්ත හා කර්මාන්ත අමාත්‍ය වෛද්‍ය රමේෂ් පතිරණ මහතා සහ ආයෝජන ප්‍රවර්ධන අමාත්‍ය දිලුම් අමුණුගම මහතා අතර විශේෂ සාකච්ඡාවක් අද ( 11 ) ආයෝජන ප්‍රවර්ධන අමාත්‍යංශ පරිශ්‍රයේදී පැවැත්විණි. එහිදී අදහස් දක්වමින් වැවිලි කර්මාන්ත හා කර්මාන්ත අමාත්‍යවරයා සදහන් කලේ මේ වනවිටත් අපනයන ආර්ථිකය ප්‍රවර්ධනය කිරීම ඉලක්ක කරගනිමින් ආයතන ගණනාවකම අගය එකතුකල නිෂ්පාදන වැඩපිළිවෙළවල් ගණනාවක් ක්‍රියාත්මක වන බවත් කන්කසන්තුරේ සිමෙන්ති කම්හල , පරන්තන් රසායනික කම්හල , ලුණු සමාගම , පිගන් සංස්ථාව ආදි ආයතන ගනනාවක් නව ආයෝජකයන් සහිතව ආරම්භ කිරීමේ වැඩ කටයුතුත් ක්‍රියාත්මක කරමින් සිටින බවයි. එමෙන්ම ඉදිරියේදී රජයේ ඉඩම් ආයෝජනයන් සදහා නිදහස් කිරීමේදී එක ආයතනයක් හරහා පමණක් නිදහස් කිරීමට ඉඩම් බැංකුවක් ( Land bank ) නිර්මාණය කිරීමට කටයුතු කරමින් සිටින බවත් අමාත්‍යවරයා තවදුරටත් සදහන් කලේය. එහිදී ආයෝජන ප්‍රවර්ධන අමාත්‍යවරයා අදහස් දක්වමින් ප්‍රකාශ කලේ මෙරට තුළ ආයෝජනය කිරීමට පැමිණෙන්නන් හට ඊට අවශ්‍ය නීතිමය හා ප්‍රායෝගික තත්වයන් සියල්ල අමාත්‍යංශය මැදිහත්වීමෙන් නිරාකරණය කොට දෙමින් උපරිම නිදහස් වටපිටාවක් සලසා දෙන බවයි. ඒ වෙනුවෙන් IFC  (ඉන්වෙස්ට්මන් ෆැසිලිටේට්ස් සෙන්ටර් ) සහ IFCC (ඉන්වෙස්ට්මන් ෆැසිලිටේට්ස් සෙන්ටර් කමිටි ) ඇති කොට ක්‍රියාත්මක කරමින් සිටින බවයි. එමෙන්ම ලංකා කාර්මික සංවර්ධන මණ්ඩලය ( IDB ) , ආයෝජන ප්‍රවර්ධන මණ්ඩලය (BOI) සහ අපනයන සංවර්ධන මණ්ඩලය ( EDB ) ක්‍රියාත්මක කරන ඒකාබද්ධ යාන්ත්‍රණයක් තුළින් ආයෝජන අවස්ථා වැඩිකරගැනීමට කටයුතු කලයුතු බවත් සදහන් කලේය. මෙම සාකච්ඡාව තුලදී වැඩි ආයෝජන ඉඩ ප්‍රස්ථාවන් ඇති ඛනිජ වැලි ආදි කර්මාන්තයන් පිළිබඳව පුළුල්ව සාකච්ඡාවට ලක්කෙරුණු අතර විධිමත් ඉදිරි සැලසුමක් ඔස්සේ එහි ආර්ථික ප්‍රතිලාභයන් රටට අත්කර දීමේ ක්‍රමවේදයක් නිර්මාණය කිරීමටද සාකච්ඡා කෙරිණි. මෙම අවස්ථාවට කර්මාන්ත අමාත්‍යංශයේ ලේකම් තිලකා ජයසුන්දර , කර්මාන්ත අමාත්‍යංශයේ සහ ආයෝජන ප්‍රවර්ධන අමාත්‍යංශයේ අතිරේක ලේකම්වරු , ලංකා කාර්මික සංවර්ධන මණ්ඩලය, භූ විද්‍යා සමීක්ෂණ හා පතල් කැණීම් කාර්යංශය, අපනයන සංවර්ධන මණ්ඩලය , ආයෝජන ප්‍රවර්ධන මණ්ඩලය , ලංකා ඛනිජ වැලි සමාගම ආදි රේඛීය ආයතන ගණනාවක සභාපතිවරුන් , අධ්‍යක්ෂ ජනරාල් වරු ඇතුළු නිළධාරින් රැසක්ද එක්ව සිටියහ.