கண்ணோட்டம்

இந்த அமைச்சகம் 1931 ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முதலில் நிறுவப்பட்ட அமைச்சகங்களில் ஒன்றாகும். இது தொழில்துறை துறையை மேம்படுத்துவதற்கான முதன்மைப் பொறுப்பைக் கொண்டுள்ளது. 06.10.2020 தேதியிட்ட 2196/27 ஆம் இலக்க அசாதாரண வர்த்தமானி அறிவிப்பின்படி, “உலகளாவிய போட்டியின் சூழலில், உள்ளூர், பிராந்திய மற்றும் சர்வதேச விநியோக வலையமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம், தொழில்களை பல்வகைப்படுத்துவதன் மூலம் ஒப்பீட்டளவில் பெரிய லாபத்தை ஈட்டுவதற்காக மேம்பட்ட உத்திகளைப் பின்பற்றுவதன் மூலம் உள்ளூர் தொழில்துறை துறையை வலுப்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் அமைச்சின் நோக்கமாகும்.

இந்த அமைச்சகம் 34 பல்வேறு சட்டரீதியான அமைப்புகள் மற்றும் பொது நிறுவனங்களை வழிநடத்துகிறது. மேலும், 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க தொழில்துறை மேம்பாட்டுச் சட்டம் மற்றும் 2006 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க தேசிய நிறுவன மேம்பாட்டு ஆணையச் சட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதற்கு இந்த அமைச்சகம் பொறுப்பாகும். இந்த அமைச்சின் சிறப்பு முன்னுரிமைகளாக பின்வருவன அடையாளம் காணப்பட்டுள்ளன.

  • கைத்தொழிலதிபர்கள் முகங்கொடுக்கும் பிரச்சனைகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை தயாரித்தல்
  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயல்முறையை மிகவும் வினைத்திறன்மிக்கதாக மாற்றுவதற்கான ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை தயாரித்தல்
  • ஏற்றுமதியுடன் தொடர்புடைய செயல்முறையை பலப்படுத்துவதற்கான கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை உருவாக்குதல்
  • தற்போதுள்ள கைத்தொழில்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துதல் மற்றும் புதிய கைத்தொழில்துறை வாய்ப்புக்களை ஏற்படுத்துதல்
  • வீழ்ச்சியடைந்துள்ள கைத்தொழில்கள் மற்றும் வர்த்தகங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கான கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை உருவாக்குதல் மற்றும் செயற்படுத்துதல்.
  • உள்நாட்டுத் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வர்த்தகர்களைப் பாதுகாத்தல் மற்றும் பலப்படுத்துதல்
  • ஏறாவூரில் ஆரம்பிக்கப்படவுள்ள கைத்தொழில் பூங்காவிற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்
  • கனிய வளங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நாட்டின் உற்பத்தி செயல்முறையை பலப்படுத்துவதற்காக அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளல்.

தூர நோக்கு

உலகளாவிய ரீதியில் போட்டித்தன்மை வாய்ந்த, நிலைபெறுதகு மற்றும் தனித்துவமான இலங்கை உற்பத்திக் கைத்தொழில்துறை

செயற்பணி

தொழில்நுட்பம், அறிவு மற்றும் புத்தாக்க சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் உகந்த சூழலை உருவாக்குவதன் மூலம் பலதரப்பட்ட, உயர் பெறுமதி சேர்க்கப்பட்ட, புதிய கைத்தொழில்துறை உற்பத்திகள், சுற்றுச்சூழல்நேய நேர்மையான செயல்முறைகள் பயன்பாட்டை ஊக்குவித்தல்,  சந்தைக்கான உயர் பிரவேச  வாய்ப்புகள் மற்றும் அனைவருக்கும் அனுகூலங்கள் கிடைக்கும் கைத்தொழில்துறை அபிவிருத்தியை உறுதிப்படுத்தல்

கைத்தொழில் அமைச்சின்  இலக்குகள்s

      1. 2030 ஆம் ஆண்டாகும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில்துறையின் பங்களிப்பை 26% இலிருந்து 30% வரை அதிகரித்தல்.
      2. 2030 ஆம் ஆண்டாகும்போது  உற்பத்தித் துறையின் பங்களிப்பை  16% இலிருந்து  25%  வரை அதிகரித்தல்.
      3. 2025 ஆம் ஆண்டில்   சிறிய மற்றும் நடுத்தர  தொழில் முயற்சிகளில்  இளைஞர் கள் மற்றும் பெண் தொழில் முயற்சியளார்களின் பங்களிப்பை    20%  இனால்  அதிகரித்தல்.
      4. 2030  ஆம் ஆண்டாகும்போது  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதித் துறையின் பங்களிப்பை 15%  இலிருந்து 25%  வரை அதிகரித்தல்.
      5. 2025   ஆம் ஆண்டாகும்போது கைத் தொழில்  வலயங்களுக்கான காணியின் அளவை  0.04% இலிருந்து 1%  ஆக அதிகரித்தல்