தேசிய உற்பத்தித்திறன் ……..

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டி 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளது…….. “சுத்தமான இலங்கை” தேசிய திட்டத்தின் நோக்கங்களை அடைவதற்கான ஒரு கருவியாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ள தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டியின் தொடக்க விழா, பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தலைமையில், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்னெத்தியின் பங்கேற்புடன், அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டி, பள்ளிகள், அரசு மற்றும் உற்பத்தி மற்றும் சேவைகள் ஆகிய 3 முக்கிய துறைகளின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் செயலகம், 20 பிராந்திய நாடுகளுடன் இணைந்து ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) வழிகாட்டுதலின் கீழ் இலங்கையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக செயல்படும் முதன்மையான அரசு நிறுவனமாகும். உற்பத்தித்திறன் செயலகம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பல்வேறு துறைகளில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை செயல்படுத்துகிறது, மேலும் தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டி இந்த திட்டங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையின் பல்வேறு துறைகளில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பு (APO) வழங்கும் ஆதரவைப் பாராட்டிய பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், “சுத்தமான இலங்கை” தேசிய திட்டத்திற்கு இணையாக நாட்டின் ஒவ்வொரு துறையிலும் உற்பத்தித்திறன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது முக்கியம் என்றும் கூறினார். வரலாற்றில் முதல் முறையாக இந்த உற்பத்தித்திறன் கருத்து இலங்கை பள்ளி அமைப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், எதிர்காலத்தில் இது கொண்டு வரும் நன்மைகள் மிகவும் நிலையானதாக இருக்கும் என்றும் பிரதமர் கூறினார். இந்த நிகழ்வில் பேசிய கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டியின் மூலம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உற்பத்தித்திறன் கருத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்ல முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். உற்பத்தித்திறன் கருத்தை சமூகமயமாக்குவதே தனது அமைச்சின் நோக்கம் என்றும், தற்போதைய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் “சுத்தமான இலங்கை” தேசிய திட்டத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப நடத்தப்படும் இந்த போட்டியின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை அதிகரிக்க நம்புவதாகவும் அவர் கூறினார். இந்த உற்பத்தி கருத்துக்களை செயல்படுத்துவதன் மூலம் பொது சேவையில் உள்ள திறமையின்மையை நீக்கி, பொது சேவையை ஒரு புதிய பாதைக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அமைச்சர் ஹந்துன்நெத்தி வலியுறுத்தினார். முக்கிய உரையை ஆற்றிய ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் இந்திர பிரதான சிங்கவிந்த, எந்தவொரு நாட்டிலும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தித்திறன் கருத்துக்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 2025/2026 தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டிக்கான அளவுகோல்களும் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டன. இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் சனத் குமநாயக்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதந்திரி, தொழில்துறை அமைச்சின் செயலாளர் திலகா ஜெயசுந்தர, அமைச்சரவை அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், ஆளுநர்கள், அமைச்சக செயலாளர்கள், முப்படை அதிகாரிகள், அரச நிறுவனங்களின் தலைவர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய உற்பத்தித்திறன் விருதுப் போட்டி மீண்டும் இவ்வருடத்தில் இருந்து

வருடங்களுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் போட்டியை பாடசாலைகள், அரச, உற்பத்தி மற்றும் சேவை போன்ற பிரதான துறைகளின் கீழ் மீண்டும் நடாத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. கிளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) தேசிய திட்டத்தின் நோக்கத்தை அடைந்து கொள்வதற்கான கொள்வதற்கான உபாயமாக இந்தத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்மாதிரியான நிறுவனங்களை அடையாளம் காணுதல் மற்றும் தேசிய மட்டத்தில் மதிப்பிற்கு உள்ளான மற்றும் வளங்களைப் பாதுகாப்பதன் மூலம் நிலைபேறான வளர்ச்சிக்காக எதிர்கால உலக சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு அரச நிறுவனங்களைத் தயார்படுத்துதல் போன்ற இலக்குகளுடன் 2003 ஆம் ஆண்டில் இந்த தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் போட்டி அறிவிக்கப்பட்டதுடன் 2020 ஆம் ஆண்டில் இருந்து இந்த போட்டி நடாத்தப்படவில்லை.
“INTERNATIONAL INDUSTRY EXPO 2024 ” கண்காட்சிக்கான அனுசரணை காசோலைகள் வழங்கப்பட்டன

“INTERNATIONAL INDUSTRY EXPO 2024 ” கண்காட்சிக்கான அனுசரணை காசோலைகள் வழங்கப்பட்டன ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை நோக்கி இலங்கையை கொண்டுசெல்லும் நோக்கில் கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை இணைந்து ஏற்பாடு செய்யும் “International Industry Expo 2024 Sri Lanka” முதலாவது சர்வதேச கைத்தொழில் கண்காட்சிக்கான அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் அனுசரணை காசோலைகள் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண அவர்களிடம் அடையாளபூர்வமாக பெப்ரவரி 12 ஆம் திகதி கைத்தொழில் அமைச்சில் கையளிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் “Industry 2023” தேசிய கைத்தொழில் கண்காட்சியானது கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் காலி ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு நான்கு கண்காட்சிகள் நடாத்தப்பட்டதுடன் அந்தக் கண்காட்சிகள் ஊடாக உள்நாட்டுக் கைத்தொழில் துறையில் பாரிய புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு முடியுமாகியது. அதன் அடுத்த கட்டமாக உள்ளூர் கைத்தொழில்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசெல்லும் நோக்கில் இந்த “International Industry Expo 2024 Sri Lanka” கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியின் பிரதான அனுசரணையாளர்களாக Power Hands Plantation தனியார் கம்பனி, TVS Lanka தனியார் கம்பனி, Hayleys Solar தனியார் கம்பனி, SMR Consolidated கம்பனி, American Premium Water Systems தனியார் கம்பனி மற்றும் Accolade Engineering தனியார் கம்பனி ஆகிய கம்பனிகள் இன்றைய தினம் அமைச்சர் ரமேஷ் பத்திரண அவர்களிடம் அனுசரணை காசோலைகளை வழங்கின. ஜூன் 19 முதல் 23 வரை கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப வளவில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இக்கண்காட்சியில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள், கைத்தொழிலாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காட்சியாளர்களின் 1000 இற்கும் மேற்பட்ட விற்பனைக் கூடங்களைக் கொண்ட இந்த மாபெரும் கண்காட்சியானது சர்வதேச கருத்தரங்குகள், கைத்தொழில்துறை கருத்தரங்குகள், இலங்கையின் மரபுவழி வரும் ஆடையலங்காரக் கண்காட்சிகள், உள்நாட்டில் பாகங்கள் ஒன்றிணைக்கப்பட் வாகன அணிவகுப்புகள், புத்தாக்க உற்பத்திக் கைத்தொழில்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இந்த அனுசரணை காசோலைகளை வழங்கும் நிகழ்வில் கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் விமலசூரிய, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் வைத்தியர் சாரங்க அழகப்பெரும, அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் – கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண.

ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின்போது பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் கைத்தொழில்துறையின் முன்னேற்றத்திற்கு தேவையான மூலோபாய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தயங்க மாட்டேன் என கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண அவர்கள் தெரிவித்தார். கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில் கைத்தொழில் அமைச்சு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த “பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் கண்காட்சி 2024” கண்காட்சியில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கண்காட்சிப் பூமி பூராவும் சென்று பார்வையிட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண அவர்கள், பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கைத்தொழிலதிபர்களுடன் கருத்துகளை பரிமாறிக்கொண்டதுடன் அப்போது கைத்தொழிலதிபர்கள் தற்போது மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதிலுள்ள பிரச்சினைகள், பயிற்சி பெற்ற பணியாளர்கள் பற்றாக்குறை, உற்பத்தி செலவு அதிகரிப்பு, அமுலிலுள்ள வரிக் கொள்கைகள் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரிடம் விடயங்களை முன்வைத்தனர். இங்கு, சர்வதேச சந்தையை வெற்றிகொள்ள முடியுமான மட்டத்திலான உயர் தரமான பாதணிகள் மற்றும் தோல் உற்பத்திக்காக கைத்தொழில்துறையினரை தனிப்பட்ட வகையில் பாராட்டிய அமைச்சர், நாட்டிற்கு அன்னியச் செலாவணி வருமானத்தை சேமிக்கும் இந்தப் பாரிய கைத்தொழில் துறையை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மிக விரைவில் எடுப்பதாக தெரிவித்தார்.
பாடசாலை கைத்தொழில் முயற்சியாளர்கள் வட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்திய 10 ஆசிரியர்கள் இந்தியா பயணம்…..

பாடசாலை கைத்தொழில் முயற்சியாளர்கள் வட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்திய 10 ஆசிரியர்கள் இந்தியா பயணம்….. ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரமொன்றின் நிமித்தம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக தொழில்முயற்சிகள் தலைமைத்துவத்தை பாடசாலையிலேயே இனங்கண்டு அவர்களை ஊக்குவித்து எதிர்காலத்தில் திறமையான தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் நோக்கத்துடன், கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண எண்ணக்கருவின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை கைத்தொழில் முயற்சியாளர்கள் வட்டங்களிடையே அவற்றை சிறப்பான வகையில் நடைமுறைப்படுத்தும் பாடசாலைகளின் கைத்தொழில் முயற்சியாளர்கள் வட்டங்களுக்குப் பொறுப்பான பத்து ஆசிரியர்களுக்கு இந்தியாவில் கைத்தொழில் துறைகளை ஆராய்வதற்கான ஆய்வு சுற்றுலாவொன்றுக்கான வாய்ப்பை வழங்குவதற்கு கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் அண்மையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட பத்து ஆசிரியர்கள் அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டதுடன், இந்த விஜயத்தின்போது பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல கைத்தொழிற்சாலைகளை அவதானிப்பதற்கான வாய்ப்பு அந்த ஆசிரியர்களுக்குக் கிடைத்தது. விஜயத்தை முடித்துக் கொண்டதன் பின்னர் பெப்ரவரி 12 ஆம் திகதி கைத்தொழில் அமைச்சில் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரண அவர்களைச் சந்தித்த அந்த ஆசிரியர்கள் அந்த ஆய்வு விஜயத்தின் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்ட அனுபவத்தை தமது பாடசாலைகளின் தொழில் முயற்சியாளர்கள் வட்டங்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் விதம் பற்றியும், அமைச்சரிடம் தெரிவித்தனர். ஆசிரியர்கள் மாத்திரமன்றி பாடசாலை தொழில் முயற்சியாளர்கள் வட்டங்களில் வெற்றிகரமாக முன்னறி வரும் பாடசாலை தொழில்முயற்சியாளர்களையும் தெரிவு செய்து எதிர்காலத்தில் அவர்களுக்கும் தொழில் முயற்சிகள் தொடர்பான வெளிநாட்டு கல்விச் சுற்றுலாக்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளமாறு அமைச்சர் ரமேஷ் பத்திரண அவர்கள் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவருக்கு பணிப்புரை விடுத்தார். இந்த சந்திப்பின்போது இந்த ஆசிரியர்கள், ஏற்கனவே தமது பாடசாலைகளில் தொழில்முயற்சியாளர்கள் வட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக செயற்படுவதாகவும், அந்த வட்டங்களில் உள்ள மாணவர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், சில பாடசாலை தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி சந்தையில் விற்பனைக்கு விடுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சரிடம் தெரிவித்தனர். இங்கு மாணவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட சில பொருட்களையும் அந்த ஆசிரியர்கள் அமைச்சரிடம் காண்பித்ததுடன், அந்தத் தயாரிப்புகளின் தரம் மற்றும் வடிவமைப்பை அமைச்சர் பாராட்டினார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை தொழில் முயற்சியாளர் வட்டங்கள், தற்போது நாடளாவிய ரீதியில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் சுமார் 10,000 பாடசாலை மாணவர்கள் இங்கு செயற்படுகின்றனர். தற்போது சில பாடசாலைகளில் பாடசாலை மட்டத்தில் உற்பத்திக் கைத்தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைவர் வைத்தியர் சாரங்க அழகப்பெரும, கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தொழில் முயற்சிகள் அபிவிருத்திப் பணிப்பாளர் ரேணுக்கா ஜயலத், உதவிப் பணிப்பாளர் கலாநிதி சமிந்த ரணதுங்ககே ஆகியோர் கலந்துகொண்டனர்.
மோட்டார் வாகன உற்பத்திக் கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்காக கைத்தொழில் அமைச்சினால் பல்வேறு திட்டங்கள்….

மோட்டார் வாகன உற்பத்திக் கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்காக கைத்தொழில் அமைச்சினால் பல்வேறு திட்டங்கள் இலங்கையின் மோட்டார் வாகன உற்பத்தித் துறையில் உற்பத்தி செயல்முறையை எளிதாக்குவதற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கும் செயலமர்வொன்று பெப்ரவரி 16 ஆம் திகதி கொழும்பு மரினோ பீச் ஹோட்டலில் நடைபெற்றது. இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள கைத்தொழிலாளர்களுக்கு இந்தத் துறை தொடர்பாக அரசாங்கம் பின்பற்றும் வழிமுறைகள் மற்றும் தமது உற்பத்திகளுக்கு அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியுமான உதவி பற்றிய தெளிவைப் பெற்றுக்கொடுப்பதே இந்த செயலமர்வின் முதன்மை நோக்கமாகும். கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திருமதி திலக்கா ஜயசுந்தர அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் 100 இற்கும் மேற்பட்ட மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள், மோட்டார் வாகன பாகங்களை ஒன்றிணைப்பவர்கள மற்றும் மோட்டார் வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர். கைத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வு இலங்கை சுங்கம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம், இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம், சுற்றாடல் அமைச்சு, மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடாத்தப்பட்டது. ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக இனங்கண்டு கொள்ளப்பட்டுள்ள 7 துறைகளிடையே மோட்டார் வாகன கைத்தொழில் துறை முக்கிய இடத்தை வகிக்கின்றது. அந்தக் கைத்தொழில் துறையை முன்னேற்றும் நோக்கத்துடன், 2021 ஆம் ஆண்டில், கைத்தொழில் அமைச்சானது தனியார் துறையின் உதவியுடன் மோட்டார் வாகன கைத்தொழிலுக்கான தர நிர்ணயத் தொழிற்பாட்டு நடைமுறையை (SOP) அறிமுகப்படுத்தியதன் பின்னர் அந்தக் கைத்தொழில் துறையில் துரித வளர்ச்சி ஏற்பட்டது. 2021 ஆம் ஆண்டாகும்போது இலங்கையில் செயற்படுத்தப்பட்ட வாகன பாகங்களை ஒன்றிணைக்கும் கைத்தொழில்களின் எண்ணிக்கை 4 ஆக இருந்ததுடன், 2021 இல் தர நிர்ணயத் தொழிற்பாட்டு நடைமுறை (SOP) அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் 32 நிறுவனங்கள் வாகன பாகங்களை ஒன்றிணைப்பதற்காக கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்துகொண்டுள்ளன. அவற்றில 14 நிறுவனங்கள் தற்போது வர்த்தக ரீதியாக தங்களுடைய உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் 90 வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்திக்கான பதிவைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அவற்றில் 58 பேர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்தத் துறையின் முன்னேற்றத்திற்காக பல வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கமைய, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தக் கைத்தொழில் துறை பெரும் முன்னேற்றம் அடையும் என கைத்தொழில் அமைச்சினால் எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் வருடாந்த வாகன இறக்குமதிச் செலவான 1850 பில்லியன் ரூபாவை 30% மீதப்படுத்துவதும் எதிர்காலத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தின் அதிகளவை இத்துறையினூடாக வழங்குவதும் கைத்தொழில் அமைச்சின் நோக்கங்களில் ஒன்றாகும். அத்துடன் அதிக எண்ணிக்கையிலான தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியுமான ஒரு கைத்தொழிலாகவும் இந்தத் துறை முக்கியமானதாக இருக்கின்றது. மோட்டார் வாகன உற்பத்தியின்போது இரு சக்கர வாகனப் பாகங்களை ஒன்றிணைக்கும்போது உள்நாட்டு பெறுமதி சேர்ப்பு 25% இலும் அதிகளவிலும், நான்கு சக்கர வாகனப் பாகங்களை ஒன்றிணைக்கும்போது உள்நாட்டு பெறுமதி சேர்ப்பு 20% இலும் அதிகளவிலும், உதிரிப் பாகங்கள் உற்பத்தியின்போது உள்நாட்டு பெறுமதி சேர்ப்பு 50% இலும் அதிகளவிலும் இருத்தல் வேண்டுமென்பதோடு அதன்போது அந்த உற்பத்திகளுக்காக 70% வரிச் சலுகையைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த செயலமர்வின்போது உள்நாட்டுப் பெறுமதி சேர்ப்பை அதிகரித்துக்கொள்ளல், இறக்குமதி ஏற்றுமதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளல், பிணைக்கப்பட்ட பண்டசாலைகளை (கிடங்குகள்) பேணிவரல், சுற்றாடல் அனுமதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் அந்த துறையில் நிலவும் சிக்கல்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்த செயலமர்வில் கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், மோட்டார் வாகனத் துறை ஆலோசனைக் குழு உத்தியோகத்தர்கள், வாகன உற்பத்தியாளர்கள், வாகன பாகங்களை ஒன்றிணைப்போர், வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்கள், தொழில் முயற்சியளார்கள் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையானோர் கலந்துகொண்டனர்.
පාසල් අධ්යාපනයේ පටන් කර්මාන්ත දිරිගැන්වීමේ වැඩපිළිවෙළක් සකස් කළ යුතුයි – කර්මාන්ත ඇමති
ශ්රී ලංකා ආර්ථිකයේ කාන්තාවගේ සක්රිය දායකත්වය ඉතා ඉහලයි. එබැවින් ඔවුන් තවදුරටත් තාක්ෂණිකව බලාත්මක කිරීම ඉතා වැදගත් – අමාත්ය රමේෂ් පතිරණ
කාර්මික තාක්ෂණ ආයතනයේ ( ITI ) බෞද්ධාලෝක මාවතේ පිහිටි ප්රධාන කාර්යාලය සහ විද්යා මාවතේ මෙන්ම මාළඹේ පිහිටි තාක්ෂණ සේවා පරිශ්රයනුත් නිරීක්ෂණය
The Minister of Industries is taking necessary steps to resume the production of Paranthan Chemical Factory soon